Michaël Dudok de Wit.
Hope you all heard about him. An animator from Dutch, who is known for his enchanting, yet beautiful animation shorts.
- Tom Sweep (1992)
- The Monk and the Fish (1994)
- Father and Daughter (2000)
- The Aroma of the Tea (2006)
- அவர் இயக்கிய விளம்பரப்படங்கள்
- Interview of Michael Dudok De Wit
மென்மையான இசை, பாந்தமான வண்ணங்களுடன் சாதாரண கதையினை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றுவிடுவார் டுடோக். தத்துவமும் நுட்பமும் நிறைந்த இவரது படைப்புகள் என்றுமே சலிக்காதவை. வசனம் என்பதே இல்லாத படைப்புகள் இவருடையது. நம்மூர் கார்டூன்கள் தொண்டை நீர் வற்றும் வரை கத்துவது நினைவுக்கு வருகிறதா? (அப்படிக் கத்தினாலும் டிமோன் அண்ட் பும்பாவை மறக்கத்தான் முடியுமா?)
சரி இப்போது எதற்கு இதெல்லாம் எனில், குறும்படங்கள் விளம்பரப்படங்கள் மட்டுமே இயக்கியிருந்த டுடோக் சென்ற வருடம் இயக்கிய The Red Turtle என்ற அனிமேஷன் திரைப்படத்தினை இன்று பார்த்தேன். அவர் இவ்வளவு காலம் திரைப்படம் இயக்காமல் இருந்து ஏன் திடீரென்று ஒரு திரைப்படம் இயக்கியிருக்கிறார் எனில் அதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கவேண்டுமல்லவா? இருக்கிறது.
// According to Vincent Maraval, head of Wild Bunch, he visited Studio Ghibli in Japan in 2008 and met with Hayao Miyazaki. Miyazaki showed him the short film Father and Daughter and asked him to find its director, Michaël Dudok de Wit, with the prospect of co-producing a feature film. Wild Bunch approached Dudok de Wit in London and convinced him to take on the project. The screenplay was written by Dudok de Wit and Pascale Ferran – WIKI //
ஒரு அனிமேஷன் படம் எப்படி இப்படியொரு உணர்வினைக் கடதவியலும் என்பதற்கு இப்படம் ஒரு அதிசிறந்த உதாரணம். ஏற்கனவே The Monk and the Fish, Father and Daughter போன்ற குறும்படங்களில் நிகழ்த்தியவர் என்றாலும், இந்தத் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது. மிகச்சாதாரண கதை. நான் முழுமையாகக் கதையினை சொல்லிவிட்டாலும் கூட அது உங்களுக்கு எந்தவிதமான ஸ்பாயிலாராகவும் இருக்கப்போவதில்லை. இருந்தாலும் SPOILER ALERT.
கொந்தளிக்கும் கடல்.
அதிலொருவன். அனேகமாக கப்பலில் இருந்து ஏனையோர் இறக்க இவன் மட்டும் உயிர்பிழைத்திருகக்கூடும். அதுபற்றி எதுவும் காட்டப்படவில்லை. முதல் காட்சியே கொந்தளிக்கும் கடலில் தத்தளிக்கும் ஒருவன்.
ஆளில்லா ஒரு தீவுக்கு அடித்து வரப்படுகிறான் அவன். அவனுக்குப் பெயரேதும் சொல்லப்படவில்லை. தீவின் மூலை முடுக்குகளில் எல்லாம் சென்று கத்துகிறான். எந்தவொரு கூப்பாட்டிற்கும் பதில் வருவதில்லை. ஆட்கள் இருந்தால் தானே!
அங்கு அவனுக்கு உணவுக்கு பஞ்சமில்லை. சிறிது நாளில் காட்டிலுள்ள மூங்கில்களை வைத்து மிதவை தயார் செய்து வெற்றிகரமாக கடலில் இறங்குகிறான். தீவினை விலகி சிறிது தூரம் சென்றது கண்ணுக்குத் தெரியாத ஒரு கடல் விலங்கால் அவனது மிதவை உடைக்கப்படுகிறது. மீண்டும் தீவுக்கே திரும்புகிறான். அங்கு அவனையும் மணலில் விளையாடும் நண்டுகளையும் தவிர வேறு யாருமில்லை. மீண்டுமொரு மிதவை தயார் செய்கிறான். மீண்டும் கடல். மீண்டும் அதே போல ஏதோவொரு பெரிய கடல் உயிரினத்தால் அது உடைக்கப்படுகிறது. மீண்டும் தீவு. மீண்டும் மிதவை தயாரிப்பு. மீண்டும் கடல். இப்போது கையில் ஒரு பெரிய மூங்கில் கம்பு, பாதுகாப்பிற்காகவும்; தன் மிதவையினை தாக்கி உடைக்கும் அந்தக் கண்ணுக்குத் தெரியாத உயிரினத்தை தாக்கவும்; இம்முறை அந்த உயிரனத்தைப் பார்த்துவிடுகிறான். அது ஒரு பெரிய சிவப்பு ஆமை.
மீண்டும் தீவு. என்ன செய்வதென்று தெரியவில்லை. விரக்தியில் கத்துகிறான். கடலிலிருந்து தீவிற்குள்ளாக ஏதோவொன்று ஊர்ந்து வருவதைப் பார்க்கிறான். அவனது தப்பிக்கும் திட்டங்களை தவிடுபொடியாக்கிய ஆமையே தான் அது. ஆத்திரத்தில் ஒரு மூங்கில் கம்பால் அதன் தலையில் அடிக்கிறான். பின்பு அது மேலும் நகராதவாறு அதனைத் திருப்பிப் போடுகிறான். போட்டுவிட்டு மீண்டுமொரு மிதவை செய்வதில் சிரத்தையுடன் ஈடுபடுகிறான். அப்போது அவனது மனம் கேட்கவில்லை. ஆமை அசையாமல் கிடக்கிறது. அதற்காக ஒரு மீனைப் பிடித்துச் செல்கிறான். பின்பே அது இறந்தது தெரியவருகிறது.
இதற்கு பின்பு நடப்பதையெல்லாம் பார்த்து தான் அனுபவிக்க இயலும். எங்கிருந்தோ வந்த ஆமை; அவனுக்குத் தொல்லை தந்த ஆமை அவனது வாழ்க்கையினேயே மாற்றுகிறது.
இப்படம் போல என்னை சமீபத்தில் வேறெந்த படமும் தொந்தரவு செய்திருக்கவில்லை. Lars von Trier இயக்கிய ‘Dogville’ படம் பார்த்ததுண்டா?
படம் முழுக்க ஒரு நாடக அரங்கில் (ஒரு கிராமத்தைப் போன்று சித்தரிக்கப்பட்ட அரங்கு) நடக்கும். வீடுகளுக்கு சுவர்களோ கூரையோ இருக்காது. ஆனால் நடிகர்கள் இயல்பாக ஒரு வீட்டில் குடியிருப்பதைப் போல நடிதிருபார்கள். கிட்டத்தட்ட மூன்று மணிநேரப்படம். எனக்கு மிகப்படித்த படம். ஏனெனில் இயக்கியது Lars von Trier அல்லவா. My Man. அதுதான். இப்படம் ஒரு நாடக அரங்கினில் எடுக்கப்பட்டிருந்தாலும் இது அந்த செயற்கை அரங்கையும் மீறி மிகப்பெரிய வலியினை உண்டாக்கக்கூடிய படம். அது போலவே எனக்கு இந்த The Red Turtle படம் இருந்தது. படத்தில் ஒரு வசனம் கூட இல்லை.
கண்களில் கண்ணீர் நிறைய பார்த்து முடித்தேன்.
Simply breathtaking movie.
PS: மேலே டுடோகின் நேர்காணலுக்கு லிங்க் கொடுத்திருப்பேன். கட்டாயம் பாருங்கள்.